Tuesday, October 14, 2008

தொலைந்த முகவரி






எங்கேயோ
தொலைத்து
விட்டோம்
எங்கள் முகவரியை….

வாக்களித்தே
தேய்ந்து போனது
எம்
ஆயுள் ரேகை….

எம் கவசம்,
தேயிலை பறித்த போது
படிந்த கரைகளின்
மொத்தம்….

சிந்திய இரத்தத்திற்கு
இறக்குமதி - நமக்கே
உச்சரிக்கத்
தெரியாத
கணிணிகள்…

வாக்களித்த
எம் வீடுகளுக்கு
இங்கே கதவுகள்
இல்லை…

வாக்கு கார்டுகள
நோட்டு சீட்டுகளாகி
நேரத்திற்கொரு -
உடை
மாற்றிக்கொள்கிறது
ஒரு சிலரின்
வீட்டு சுவர்கள்…























தண்டனையா?






என் அவஸ்தைகளை
விரல்கள் வருட- இவ்
வெண்
தேவதைக்கு சொல்கிறேன்

மெதுவாய் நான் அவளை
வருடும் போதெல்லாம் - என்
வலிகளுக்கு ஒத்தடம் தருகிறாள்

உடைகள் இருந்தும் - என்
காதலுக்கு
உடுத்தத் தெரியவில்லை
போலியாய் உதட்டுக்கு
சாயம் புசுவதை விட அதன்
நிர்வாணம் மேலானதென்று…..

என் உணர்ச்சிகள்;,
காதலின் புழுக்கம்,
உண்மையின் நிறம் - இவைகள்
உன் மௌன தணலின் மேல்
தவமிருக்கின்றன…

என் எழுத்துகள் - மட்டும்
தெரியும் கவிஞனுக்கு
வலிகளின் ரணம்,
உதட்டின் முனகல்,
கண்ணீருக்குள் காதல் - மர்மமாய்
கொல்லப்படுவது ஏன்
புரியவில்லை?

என் இதயத்திற்கு - காதல்
தந்த காயத்தை ஏன் கண்ணீரால்
கழுவுகிறாய்? எரிகிறது என் இதயம்..

என் விரல்களில் - ஒன்றை
உடைத்திருக்கிறேன், - இதய
நரம்பொன்றை அருத்திருக்கிறேன்,
இவை தான் என்
பேனைக்கு
நிறம் தந்திருக்கிறது…

என் வேதனைகள் - ஒரு நாள்
உனக்கு
வேதமாகும்
அதுவரை,
கொதித்துக்கொண்டிருக்கும் கண்ணீரில்
என் இதயத்தைப்
பிழிந்து
ஒத்தடம் இடுகிறேன்….







தணல் மனம் வீசட்டும்

கவிதைகள்


எவரும் அறியாது - எனக்குள் என் ஆன்மாவில்
பதியும் உன் நினைவுகளை
உன் நினைவுகளும் தான்
தற்காலிக இருட்டினோடு உறங்காது….
என் கண்கள்
பகிர்ந்து கொள்கிறது….. உனக்காய் வற்றிவிட்ட
என் இதயக்கிணற்றில்
கவிதைகள் போலி - உன் இனி - ஒரு
இதயமும் தான், நினைவு மீனுக்கும்
உயிர்
இருக்காது….
என் சோகங்களை
அலங்கரித்து தருகிறேன், எல்லா மீன்களும் தன்
பத்திரமாய் வைத்துக்கொள் துடிப்புகளை
துறந்து விட்டிருக்கும்…
ஒரு
நாள்,
உன் நினைவுகளோடு - உறங்கும் என்
என் கல்லறைக்கு உதவும்… சவத்தை - நீ
உன் பார்வையால்
சூரியனின் பிம்பம் தெறிக்க அசுத்தமாக்காதே!
ஒரு மழை
நாளில்,
ஒரு நொடி தோன்றும் போலியான - உன்
வானவில்லாய் - உன் அன்பால்
கண்ணீர்
இதயத்தில் நானிருப்பேன், பொழியாதே!
என் உடல் நிரந்தரமாய்
உறங்கும் வேளையில்….. என் உடலுடன்
உன் நினைவுகளும்
எனக்கு கவசம் - என்
புதையட்டும்….
காதலின் நிஜம்
உனக்காய், உறவுகள் - உலகம் உறங்கிய - உன்
இருக்க - எனை மட்டும் நினைவுகளை இனி
ஏன் அநாதையாக்கினாய்? என் உதடுகள்
உச்சரிக்காது…..
எத்தனை தடவைகள் - உன்
அழைப்பு மணிக்காய் இதுநாள் வரை
என் தொலைபேசி தவமிருந்திருக்கும்? இரகசியமாய்
பற்றிக்கொண்டிருந்த
எனக்கு ஏமாற்றங்களை என் - அவஸ்தைகளை
பரிசளித்த உனக்கு நீ
இரை தந்த
இறைவன் யார்? குளிர்காய்வதற்காய்
உயிருடன் தீ மூட்டுகிறேன்…
வேண்டாம்!
உன் உறவுதனை என் அன்போடு
ஒத்தி வைக்க - என் போரிட்டு - நீ
உணர்வுகளுக்கு கொஞ்சம் ஜெயித்தால்…..
கற்றுக்கொடு…. உன் சுவாசத்தில்
என் தணல் மனம் வீசட்டும்………
விடிந்து கொண்டிருக்கும்
இரவுகளில் - நாளைய
என் இரவு மட்டும்
விடியாது……






தணல் மனம் வீசட்டும்



எவரும் அறியாது - எனக்குள் என் ஆன்மாவில்
பதியும் உன் நினைவுகளை
உன் நினைவுகளும் தான்
தற்காலிக இருட்டினோடு உறங்காது….
என் கண்கள்
பகிர்ந்து கொள்கிறது….. உனக்காய் வற்றிவிட்ட
என் இதயக்கிணற்றில்
கவிதைகள் போலி - உன் இனி - ஒரு
இதயமும் தான், நினைவு மீனுக்கும்
உயிர்
இருக்காது….
என் சோகங்களை
அலங்கரித்து தருகிறேன், எல்லா மீன்களும் தன்
பத்திரமாய் வைத்துக்கொள் துடிப்புகளை
துறந்து விட்டிருக்கும்…
ஒரு
நாள்,
உன் நினைவுகளோடு - உறங்கும் என்
என் கல்லறைக்கு உதவும்… சவத்தை - நீ
உன் பார்வையால்
சூரியனின் பிம்பம் தெறிக்க அசுத்தமாக்காதே!
ஒரு மழை
நாளில்,
ஒரு நொடி தோன்றும் போலியான - உன்
வானவில்லாய் - உன் அன்பால்
கண்ணீர்
இதயத்தில் நானிருப்பேன், பொழியாதே!
என் உடல் நிரந்தரமாய்
உறங்கும் வேளையில்….. என் உடலுடன்
உன் நினைவுகளும்
எனக்கு கவசம் - என்
புதையட்டும்….
காதலின் நிஜம்
உனக்காய், உறவுகள் - உலகம் உறங்கிய - உன்
இருக்க - எனை மட்டும் நினைவுகளை இனி
ஏன் அநாதையாக்கினாய்? என் உதடுகள்
உச்சரிக்காது…..
எத்தனை தடவைகள் - உன்
அழைப்பு மணிக்காய் இதுநாள் வரை
என் தொலைபேசி தவமிருந்திருக்கும்? இரகசியமாய்
பற்றிக்கொண்டிருந்த
எனக்கு ஏமாற்றங்களை என் - அவஸ்தைகளை
பரிசளித்த உனக்கு நீ
இரை தந்த
இறைவன் யார்? குளிர்காய்வதற்காய்
உயிருடன் தீ மூட்டுகிறேன்…
வேண்டாம்!
உன் உறவுதனை என் அன்போடு
ஒத்தி வைக்க - என் போரிட்டு - நீ
உணர்வுகளுக்கு கொஞ்சம் ஜெயித்தால்…..
கற்றுக்கொடு…. உன் சுவாசத்தில்
என் தணல் மனம் வீசட்டும்………
விடிந்து கொண்டிருக்கும்
இரவுகளில் - நாளைய
என் இரவு மட்டும்
விடியாது……






தமிழ்த்தாய்க்காய்!



எத்தனையோ கவிவரிகள்
வடித்துவட்ட போதும், - தமிழனாய்
எனைப் பிரசவித்த
உனக்காய் ஒருவரி எழுத
- என்
பேனைக்கருவிக்கோ! பேசத்தெரியவில்லை.



என்த் தாய் - எனை
மட்டும்
ஒற்றையாய்த் தாங்கி
பிரசவிக்கும்ப் போதே
உயிர்ப்போகும் வேதனை
அடைந்ததாய்,
ஊர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.



எத்தனைக்
கவிஞர்களை,
எத்தனை எழுத்தாளர்களை,
எத்தனை கதாசிரியர்களை,
ஒரேப்
பிரசவத்தில் ஈன்றவள் நீ
உன் பிரசவத்தின்
வேதனைதான் எப்படி இருந்திருக்கும்?



உன் இரத்தத்தைப் பாலாக வார்த்து,
பருகிய ஒரு துளியே - ஒரு
தமிழனை உருவாக்கியதென்றால்,
உன் ஒட்டு மொத்தப் பாலையும் - நீ
சுரந்தால், - அதைத்தாங்க
இப் ப10மிக்கெங்கே வழுவிருக்கிறது?










தேடாதே…!






பூக்களின்
நறுமணத்தைப் போல்
என்னுடன் வாழும்
உன்
நினைவுகளையும் - உன்னால்
பிரிக்க முடியாது…

நம்
இதயங்கள்
பேதமற்றிருக்கும் போது,
நமை பிரித்து
வைப்பதாய் கருதும்
உடல் வெறும்
கூடுதான்…

எனக்கு தெரியும்
உடலில்லாத - காற்று
அறியும் உணர்வுகளை
நிச்சயம்
நீயும் அறிவாய்…

உன்
கோபத் தீ
பொசுக்குவதற்கு -
நான்
பஞ்சுப்பொதி அல்ல
பகலவன்…

ஒரு
மூங்கில் காட்டிற்கு
புல்லாங்குழலை
அறிமுகம் செய்யப்
பார்க்கிறாயா?

உன்னுடன்,
உன் இதயத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எனக்குள், - ஒரு
புதிய
இதயத்தை
தேடாதே…!