Saturday, August 23, 2008

அன்னையே!




உன் அந்தரங்க கருவறைக்குள்

வாடகையின்றி

எனை வளர்த்தவள் நீ..
ஆதவனின் ஓளியில்

தான்பூச்செடி கூட

மொட்டொன்றை

பிரசவிக்கிறது,

நீ மட்டும் தான்சுயமாய்

எனைபிரசவித்தவள்..
பிரபஞ்சத்தையே

பேசவைக்கும் - உன்மௌனங்களில்

தான்பூமித்தாயின்

பொறுமையையும் கூடஉணர்கிறேன்..
உச்சி மோந்து என் நெற்றி

நனைத்த உன் - முத்தத்தின்

ஈரத்தில் தோற்றுப்

போகின்றனபனித்துளிகள்..
உனை வரையறுத்து

தோற்றுப்போகும்

லிம்காவும்,கின்னஸ_ம்,
உலகம் முற்றாய் உணராத

உன் அதிசயங்களை எழுதஇன்னும் ஆயிரம்வான புத்தகம்,ஆயிரம் மேகத்தாள்கள்போதாது...

No comments: