
...................................................
கடவுளுடன்
ஒரு கணம்
கோபித்துக்கொள்கிறேன்…
கடுங்குளிரில் கைகள்
இரண்டும் தேநீர்
கோப்பையை
பற்றிக்கொள்கிறது…
ஐன்னலின்அருகில்
பரிட்சயமான
இருவரின் முகங்கள்…
சற்று தூரத்தில்,
விழாவிற்கு
சென்று
விடைபெற்று
வந்தகுளிர்பாண
போத்தல்களை
நோட்டமிட்டு,
கரங்களால் பற்றிக்கொள்கிறான்
ஓர் ஏழை…ஓர் மனநோயாளி…
இல்லை,
அவன் மட்டுமே
இவ்வுலகில்
பொதுநலவாதி,
ஐாதி பேதம்
உணராதவன்…
கள்ளமற்ற
மனதிற்குசொந்தக்காரன்…
சுவரில் மோதும் பந்து,
தன்னிடமே
திரும்பிவருவதை
உணராதஒருவன்,
அந்த சிறிய
சிட்டின் சிறகுகளை
தன்அகோர
குரல்களால் தீண்டுகிறான்…
எதுவும்புரியாத
குழந்தையாய்,
விடைபெறுகிறான்
அந்த ஊமைப்பாடகன்…
என்மனதில்
மட்டும்விடாது
வந்து மோதுகிறது
கடவுளின் படைப்பு
பற்றிய கவலையும்….
ரணமும்….
.
No comments:
Post a Comment