Friday, August 29, 2008

வருவாயா?








என் காத்திருப்புகள்
அத்தனையும்
அர்த்தப்படுகிறது
உன் வார்த்தைகளில்…

எனக்கே நான்
அந்நியமான
போது
உனக்கு
மட்டும்
எப்படி உரிமை
கொண்ட உறவானேன்?

நிசப்தமாய்
மோதும் உன்
ஞாபக அலைகள்
என் மௌன
கவிதைகளுக்கு
இசையமைக்கிறது…

திரும்பிய திசைகள்
தோறும்
என்விழித்திரையில்
தினமும்தெறிக்கின்றன
உன்பிம்பங்கள்…

உன் நினைவுகளில்
விடை பெறுகிறது
என்இரவுகள்
அங்கு உனக்கெப்படி?

உனக்காய் காதல் கடிதம்
தீட்டஎத்தனிக்கும்
போதெல்லாம்
என் புன்னகை
மட்டுமேமிஞ்சுகிறது…

நீ அருகில்
இல்லாமல்
அர்த்தப்படவில்லை
என்வெட்கங்கள்…

என்றும் என்
நினைவுகளில்
உன் கரம்தீண்டுகிறது…

என் கூச்சங்களை
கொலை செய்யும்
உன் வார்த்தைகளில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…

உன்வரவை
என்விழிகளுக்கு
விருந்தளிப்பதற்காய்
விரதமிருக்கிறேன்
விரைவில்
வருவாயா?

No comments: