Saturday, August 30, 2008

தண்டனையா?

என்
அவஸ்தைகளை
விரல்கள் வருட-
இவ் வெண் தேவதைக்கு
சொல்கிறேன்
மெதுவாய் நான்
அவளை வருடும்
போதெல்லாம் -
என் வலிகளுக்கு
ஒத்தடம் தருகிறாள்
உடைகள் இருந்தும் -
என் காதலுக்கு உடுத்தத்
தெரியவில்லை
போலியாய் உதட்டுக்கு
சாயம் புசுவதை விட
அதன் நிர்வாணம் மேலானதென்று…..
என் உணர்ச்சிகள்;,
காதலின்
புழுக்கம்,
உண்மையின் நிறம் -
இவைகள் உன் மௌன
தணலின் மேல்
தவமிருக்கின்றன…
என் எழுத்துகள் -
மட்டும் தெரியும்
கவிஞனுக்கு வலிகளின் ரணம்,
உதட்டின் முனகல்,
கண்ணீருக்குள் காதல் -
மர்மமாய் கொல்லப்படுவது
ஏன் புரியவில்லை?
என் இதயத்திற்கு -
காதல் தந்த காயத்தை
ஏன் கண்ணீரால் கழுவுகிறாய்?
எரிகிறது என் இதயம்..
என் விரல்களில் -
ஒன்றை உடைத்திருக்கிறேன், -
இதய நரம்பொன்றை
அருத்திருக்கிறேன்,
இவை தான் என்
பேனைக்கு நிறம்
தந்திருக்கிறது…
என் வேதனைகள்
-
ஒரு நாள் உனக்கு
வேதமாகும் அதுவரை,
கொதித்துக்கொண்டிருக்கும்
கண்ணீரில் என்
இதயத்தைப் பிழிந்து
ஒத்தடம்
இடுகிறேன்….

No comments: