Friday, August 29, 2008

அலங்காரம்






தன் முதுகெழும்பின்

கிளைகளை முறித்துக்கொண்ட

பரிணாமம் மாறாத

மின்னலின் இரவு…

மேகம் கருத்து

பெய்த மழையை

கண்கள் சிவந்து

கண்ணீராய் பொழிந்தாள்…

கவலைத் தீ எரித்த

அவளின் கனவுகள்

விடியாத ஓர்

அஸ்தமனமானது…

காதல் !


கிடங்குகளில்

கற்பழிக்கப்பட்டவள்,

பிரசவித்ததென்னவோ

குரூரமாய் செதுக்கப்பட்ட

சவத்தையல்லவா?


புரிந்து
கொண்ட காதல்கள்

சுவர்க்கத்திற்கருகில்

சுடர் விடுகிறது…


பிரிந்து விட்ட

காதல்கள் தான் -
தன்னை மரணத்தால்

அலங்கரித்துக்கொள்கிறது….

No comments: