Friday, August 29, 2008

கதறி அழும் காதல் குழந்தை








தாழிடப்பட்டிருக்கும்

உன் இதய அறையில்
என் சிட்டுக்
குருவிக்கொரு
சின்ன கூடு கட்ட
இடம்
தருவாயா?


நேற்றிரவு

பிறந்த குழந்தைக்கு,
ரேகைகள் கூட
இன்னும்
துள்ளியமாய்
துளிர் விடவில்லை

உன்
இதய

வாசலை
திறப்பதற்பாய்,

என்ன வாடகை
வேண்டும்?


எதுவாயினும்
தருகிறேன்
கேள்…


என் குருவிக்
குஞ்சிக்கே

உரித்தானஸ்பரிசங்கள்,
உன் இதயத்தில்
மட்டுமே இருப்பதால்
கேட்கிறேன்…..

துணையின்றி
தவிக்கும் -
என்குழந்தைக்கு,
உன் இதயத்துடிப்புகள்
துணை இருப்பதால்
கேட்கிறேன்…..


கொத்திப்பார்த்தாள்
உன் இதயகூட்டை,
தற்போது,
தன் சொண்டுகளை
காயப்படுத்திய
இரத்தக் கரைகள்
மட்டுமே
மிச்சமாய்…


உன்
இதயக்கதவுகள்
மட்டும்இன்னும்
திறக்கப்படாமலேயே….


No comments: