Sunday, August 24, 2008

நினைவுகள்...

.............................................................................................................................................................................
என் இதயத்தை எரிக்கும்

ஓர்விநோதமான நெருப்பு

உன் நினைவுகள்…!
தேன் அருந்துவதற்காய்

உன்மனப்பூங்காவில்

அமர்ந்த போது –

ஒட்டிக்கொண்ட மகரந்த நினைவுகளைத்தான்

சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்…!
இனிப்பில் மொய்க்கும்

எறும்பைப்போல் -

தானேமலரும் பூவைப்போல்

தான்உன் நினைவுகளும்…!
என்மெழுகு மனதில்தினம் -

நீ

சுடர் விடுவதால் தான் நான்

உருகிக்கொண்டிருக்கிறேன்,

என்கண்ணீர் துளிகளும்

உறைந்துகொண்டிருக்கிறது….!
உன்நினைவெனும் சிறையில்

நெடுநாளாய்

கைது செய்யப்பட்டிருக்கிறேன்,

எப்போதுவருவாய் -

எனைமீட்பதற்கு…?

No comments: