Friday, August 29, 2008

ஆறுதல் செய்வாயா? ? ஆறுதல் செய்வாயா?










என்னவனே!

எப்படி இருக்கிறது -

எனக்கே எனை

கற்றுக்கொடுத்த

உன் பார்வைகள்?

கரை வரை வந்தும்

கால்கள் நனைக்காத

அலை போல், -

உன் இதழ்களுக்குள்ளேயே

மறைந்து கிடக்கும்

புன்னகை எப்படி
இருக்கிறது?

நாணல்களின் அசைவுகளை

தென்றல் கூட -

உன் ஓர
வகிடெடுத்த

அரைக் கூந்தலில் தானே

இரசித்தது!

எங்கே
மறைத்து

வைத்திருக்கிறாய்?

நட்சத்திரத்திற்கு ஒளி

கொடுத்த -

உன் கண்களின்

ஒளிக்கீற்றை…


நீ

இல்லாது
வாடிவிட்டன,

என் வீட்டின்
நந்தவன பூக்கள்,

சிரிப்பில்
சிதறும் உன்

எச்சிற்
துளிகளால்

அவற்றை
ஆறுதல்

செய்ய மாட்டாயா?

No comments: