
உதிர்வைப்
பற்றி
உணராமல் -
தினமும்
மலரும்
பூவைப்போல்
சந்தோஷத்தின்
அகராதியை
நம்
அன்பினால் அலங்கரிப்போம்…
எரியும்
தீபம்
தன்னை
எரித்து
சுடர்விடுகிறது,
பறப்பதற்காய் சவமாகும்
கம்பளி பூச்சியை
இழுத்து
செல்லாத எறும்புகள் -
தன் உணவையே
விட்டுத்
தருகின்றன…
மரத்திலிருந்து
மண்ணில்
சருகாகி,
தாவரத்திற்கு -
உரமாய் உயிரூட்டும்
இலைகள்….
அழுக்கான
உடல்களை
மறந்து
நாமும்
ஆன்மாவை காதலிப்போம்….
இவற்றை - இனி
ஜெயிக்கட்டும்
நம் இதயத்தின்
இரண்டு
அறைகள்…
No comments:
Post a Comment