Friday, August 29, 2008

ஜெயிக்கட்டும்..!






உதிர்வைப்
பற்றி

உணராமல் -
தினமும்

மலரும்
பூவைப்போல்

சந்தோஷத்தின்
அகராதியை
நம்

அன்பினால் அலங்கரிப்போம்…

எரியும்
தீபம்

தன்னை
எரித்து

சுடர்விடுகிறது,
பறப்பதற்காய் சவமாகும்
கம்பளி பூச்சியை
இழுத்து
செல்லாத எறும்புகள் -
தன் உணவையே

விட்டுத்
தருகின்றன…


மரத்திலிருந்து
மண்ணில்
சருகாகி,

தாவரத்திற்கு -
உரமாய் உயிரூட்டும்
இலைகள்….


அழுக்கான
உடல்களை
மறந்து

நாமும்
ஆன்மாவை காதலிப்போம்….

இவற்றை - இனி
ஜெயிக்கட்டும்
நம் இதயத்தின்
இரண்டு
அறைகள்…

No comments: