Friday, August 29, 2008

பேனை






என்னை நானே
பிரசவிக்க கர்ப்பம்
தாங்கிய
என் அன்னை…

எழுத்துக்கள்
உயிர் வாழதன்
குருதி
இழந்துசவமான தேவதை….

கொஞ்சம் தென்றலை
கொஞ்சம் புயலை
வானவில்லின்
வர்ணங்களை,
இருட்டின்
நடுவே இளம் பிறையை,
உதிக்கும் சூரியனை,
மறைந்த மனிதனை,
இத்தனையும் ஒற்றைத்
தாளில் உறைத்தவள் நீ…

எம்துயர்
துடைத்தேசருகான -
உன்ஆத்ம
சாந்திக்காய்
ஆண்டவன்
பாதம்தீண்டிய
கரங்களை
கொஞ்சம்
காண்பிக்க மாட்டாயா?



No comments: