Friday, August 29, 2008

என் தாய்






ஒரு மொட்டு

வெடிக்கும்சப்தத்தை

முழுதாய்உணர்ந்தவள்….
என் மழலை

மொழிகளுக்கு

வகுப்பெடுத்து அகராதி

அமைத்தவள்…


என்ஒவ்வொரு

உறுப்புகளுக்கும்

உருவம் தந்த

இரத்த வங்கியின்

இலக்கணம்…


நீவார்த்த

பாலிற்குவாழ்த்த

வார்த்தை இல்லை…


உச்சி மோந்து

என் நெற்றி

நனைத்த

உன் முத்தத்தின்

ஈரம்மூச்சுள்ள

வரை மறக்காது…


பனி படர்ந்த

மார்கழி இரவுகளில்

உன் மூச்சின்

வெப்பம் தானே,

எனக்கு போர்வையானது!


அன்னையே!

நீ பரிணாம சிற்பி,

எனை உருவமாக

செதுக்கியதும்

நீயல்லவா?

No comments: