
நம் சொற்களின்
தாளிப்புகள் ஓய்ந்து
கிடக்கிறது…
உன் புகைப்படத்துடன்
மட்டும் சிரித்து
விளையாடி,
விடைபெற
முடியாத
தருவாய்களை
மட்டும்
தனக்கு
சொந்தமாக்கிக்
கொள்கிறது என்
விழிகள்…
என் புன்னகையை
கலைத்துவிட்டு
உடல்
முழுவதிலுமாய்
உன்
நினைவுகளை
தரித்துகொள்கிறேன்…
என் கடிகாரத்தின்
ஒவ்வொரு
முட்களும்
நாழிகைகளை
கூட
மெதுமெதுவாய்
நாட்களைப்போல் நகர்த்துகிறது…
உன்
இதயமே
என்
வாழ்வின்
பிரபஞ்சமாய்….
இசையை
இழந்த
பாடல்களை
போல்,
துடிப்பை துறந்து
வாழும்
இதயத்தைப்
போல்,
உன் குரலை விட்டு
விட்டு
குறுஞ்செய்திகளுடன்
உறையாடி கொண்டிருக்கிறேன்…
எப்போது எனக்கு -
மீண்டும் அறிமுகம்
செய்யப்போகிறாய்
உன் குரலின்
வாசனையை….?
No comments:
Post a Comment